மாவலி வாணர் ,வாணகோ அரசர்கள் மாவலி வேட்டுவ குலத்தை சேர்ந்த மன்னர்கள் .
'..காங்கேயனை வென்று கடையனை வித்திடோம் வேட்டு மாவலிக்கு விருந்திடோம் பாண்டியன் ..'
(புதுகோட்டை கல்வெட்டு எண்-787)
வேட்டு மாவலி -வேட்டுவ மாவலி .
வேட்டுவர்களை பாணர் (மாவலியர்) என அழைக்க பட்டதை வேட்டுவ பாளையக்காரர் வரலாறு கூறுகிறது
கல்வெட்டுகள் ,பட்டயங்கள் 'மாவலியர்' வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகிறது .
மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய வேட்டுவன் விக்கிரம சோழ மகதை நாடாழ்வாரின் கி.பி.1210 இன் கல்வெட்டு இடம் - அரியலூர் மாவட்டம்,அரியலூர் வட்டம் பெரியமறை சுவேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபக் கிழக்குச்சுவர் காலம் - மூன்றாம் குலோத்துங்கன்,யா.32,கி.பி.1210 .
ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமும் கருவூரும்பாண்டியன்முடித்தலையும் கொன்உ வீரா அபிஷேகமும் லிஜையா அபிஷேகமு பண்ணி அருளிய திரிபுவ வீரதேவற்கு யாண்டு முப்பத்திரண்டாவதுன அகளங்கபுரத்து உடையார் திருப்பார்பதீஸ்வரமுடைய நாயனார்க்கு ஆறகளூருடைய பொன் பரப்பினான வேட்டும் இராஜா ராஜா தேவனாரான விக்கிரம சோழ மகதை நாடாழ்வார் திருநாமஞ் சாத்தி செய்த திருவோலக்க மண்டபம் எடுத்து வலிய பெருமானென்று இது செய்வித்தான் சென்னிவலக்கூற்றத்து ஆற்றூருடையான் பட்டன் பொன்பரப்பினான சித்திரராயன் ஸ்ரீமாயேஸ்வர ரக்ஷை .
வேட்டும்-வேட்டுவன்
வேலூர் குடியாத்தம் பகுதிகளை தலைமையிடமாக கொண்டு ஆண்ட மாவலி வாணாதிராயர்கள்:
சங்க காலத்தில் பாணர் ( மாவலி வாணாதிராயர்கள்) இப் பகுதிகளை ஆண்டார்கள் . பிறகு இவர் வழியில் வந்தவர்கள் கிபி 4 முதல் கிபி 10 வரை கல்வெட்டுகளிலும் ,செப்பேடுகளிலும் பேசபடுகிறார்கள் .
பிறகு சோழர் மன்னர்களுக்கு கீழ் படைதலைவராகவும் ,அமைச்சர்களாகவும் இருந்தவர்கள்:
முதலாம் பரந்த சோழனின் ஆட்சியில் (கிபி 913) கும்பகோணம் கல்வெட்டு ஒரு மாவலி வாணாதிராயர்கள் பற்றி கூறப் பட்டுள்ளது .
சுந்தர சோழனின் படை தலைவனாக ஒரு மாவலி வாணாதிராயர்கள் இலங்கை போரில்(கிபி 965) கலந்து கொண்டு உயிர் துறந்ததை பற்றி கும்பகோணம் கல்வெட்டு கூறுகிறது .
முதலாம் ராசா ராசா சோழனின் கல்வெட்டில் ஒரு 'ராசா ராசா வாணகோவரையர்' பற்றி கூறப்பட்டு உள்ளது .
முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் ஒரு 'ராஜேந்திர சோழ மாவலி வாணாதிராயர்கள்' பற்றி திருவண்ணாமலை கல்வெட்டு கூறுகிறது .
முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் இலங்கேஷ்சுவர வாணகோவரையர் பற்றி அரியலூர் கல்வெட்டு கூறுகிறது .விக்கிரம சோழ ஆட்சியில் 'விருதபயங்கர சுத்த மல்லனான வாணகோவரையர்' பற்றி கூறப் பட்டு உள்ளது .
பிறகு
சேலம் ஆத்தூரை தலைமை இடமாக கொண்டு ஆண்ட வாணகோவரையர்கள் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள்.
1.ராசா ராசா வாணகோவரையர்
2.மகத நாடாள்வான்
3.குலோத்துங்க வாணகோவரையர்
4.வன்நெஞ்ச வாணகோவரையர்
மதுரை அலங்காநல்லூர் பகுதியை தலைமை இடமாக கொண்டு ஆண்ட வாணகோவரையர்கள் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள்
1.திருமாலிருஞ்சோலை மாவலி வாணாதிராயர் (கிபி 15)
2. சுந்தரதோள்உடையான் மாவலி வாணாதிராயர் (கிபி 15,16)
3. இறந்தகாலம் எடுத்த சுந்தரதோள்உடையான் மாவலி வாணாதிராயர் (கிபி 16)-இவர் மதுரை நாயக்க மன்னரோடு போர் செய்து தோற்ற பிறகு ஆட்சி அதிகாரத்தை இழந்தவர் .
மணலி வாணாதிராயர்(இவர் மதுரை நாயக்க மன்னரோடு சண்டை செய்தவர் ),காளை வாணாதிராயர் போன்றோர் மதுரை நாயக்கர் ஆட்சியில் இருந்த குறுநில தலைவர்கள் .
வேட்டுவ குலத்தை காவலியர்,மாவலியர்,பூவலியர்,வில் வேடுவர் என அழைக்கபட்டதை பற்றி கல்வெட்டுகள் ,செபெடுகள் மற்றும் ஓலை சுவடிகள் கூறுகிறது .
'வாணகோ வேட்டுவதி அரையர் ' பற்றி கல்வெட்டு ( ARE 241/1979-80) கூறுகிறது .
ஆனைமங்கலம் என்னும் ஊரை ஆண்ட 'வேட்டுவதி வாணகோவரையார் 'பற்றி கல்வெட்டு (செங்கம் நடுகற்கள் 1971/39) கூறுகிறது .
மேற்கொவலூர் நாட்டை ஆண்ட 'வாணகோவரையார் வேட்டுவதி அரையர் ' பற்றி கல்வெட்டுகள் (செங்கம் ...நடுகற்கள் 1971/45) கூறுகிறது .
'கரும்புறதார்க் கெல்லாம் அரசரான மாவலி வாணா' என்று காளமேகபுலவர் கூறுகிறார் .( காளமேக புலவர் ,தனிப்பாடல் திரட்டு ,508).
கரும்புறத்தார் -வேடர் .
மணிமேகலை காலத்துச் சோழ வேந்தனாகிய நெடுமுடிக் கிள்ளியின் தேவி சீர்த்தி யென்பவள் மாவலி மரபில் தோன்றிய ஓர் அரசன் மகள் என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார்.
'நீரிற் பெய்த மூரிவார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு,
(மணிமேகலை 19. 51 - 116).
'மூத்தஅரைசர்,இளவரைசர் என்ற இரு துணை பெயர்கள் வருகின்றது .இவற்றில் மூத்தஅரைசர் என்பது மூத்த அரையர் பரம்பரை யை குறித்து வந்தது என்று கருதபடுகிறது .உண்மையில் இந்த சொல் ஒரு குலத்திலே மூத்த (senior lineage) குலம் என்பதை குறித்து வந்தது .பெரும்பாண மூத்தஅரைசர் , பெரும்பாண இளவரைசர் என்று கூறுவதில்