Thursday, September 20, 2018

மறவர் = வீரர்

வேட்டுவர் குடியைச் சேர்ந்த வீரருக்கும்(மறவர்), தற்கால மறவர் என அழைக்கப்பட்ட சாதிக்கும் எந்த தொடர்பும் இல்லை:

கி.பி.13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சியில் பாண்டியர்களால் மறகுடி என அழைக்கப்பட்டு உருவான சாதி வரலாறு.

ஆதாரம்.

---------------☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆---------------

பாளையபட்டுகளின் வரலாறு

தொகுதி-3

தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறை.

சென்னை 1981

பொருளாசிரியர் : டாக்டர்.இரா.நாகசாமி.

பதிப்பாசிரியர் : க.குழந்தைவேலன்.

மருதப்பதேவன் வம்சாவளி டி.2847

ஊத்துமலை பாளையப்பட்டு

வங்கீஸ் வழக்கும் மறக்குல பூருவெத்திரத்துக்கும் கைபீது.

ஆதி ஆரத்தியம் எங்கள் மறகுலம் உண்டானது மலையத்துவச பாண்டியனுக்கு வெகுநாள் குழந்தை இல்லாமல் அநேக தவசுகள் யன்னி பார்வதி தேவி மும்முலைத் தடக்கை யாயி மலையத்துவச பாண்டியனுக்கு குமாரத்தியா இருந்து ராஜ்ஜிய பாரஞ் செய்து கொண்டிருக்கு நாளையில் திக்கு விசயஞ்செய்ய வேண்டிய காரணத்துக்காக பராக்கிரம வீரத்துடனே சிறிது சைனீயிங்கள் வேனுமென்று அம்மனுட திருவுள்ளதிலே தோன்றி அம்மனோட விழா பொறத்திலிருந்து அனேக சைனீயங்கள் பிறக்கிற போதே அவளை தடியும் கையுமாக வெகு பராக்கிரமாய் பிறந்தார்கள்.உடனே அவர்கள் எங்களுக்கு பணிவிடை என்னவென்று அம்மனுடனே கேட்டதற்க்கு திக்கு விசயார்த்த மாக சிருஷ்டிசோம் உங்கள் ஜாதி மறவுக்கு மறம் என்று பேர் இருக்கட்டும். நாம் சிருஷ்டித்தபடியினாலே தேவன் என்றும் பட்டப்பெயர்ஆயி அனேகம்பேருக்கு சேனாதிபத்தியமுங் கட்டளையிட்டு அந்த சுத்த வீரம் பொருந்திய மறசைனீயத்துடனே அம்மன் திக்கு விசயத்துக்கு எழுந்தருளினால் ...............................................................

..............

.............

............ அப்படிபட்ட மற வம்சத்தில் நாகராஜாவின்  மகன் திண்ணராசா ராஜ்ஜியபரபாலம் செய்யும் நாளையில் வேட்டை மார்க்கத்தில் திரு காளகஸ்தி பருவத சார்பில் வரும்போது சைனீயங்களை  விட்டு பிரிந்து மறக்குல திண்ணராஜா மட்டும் தனித்து வேட்டை ஆடுகிற போது.....................

.....................

....................அப்போதிருந்த பாண்டியராஜா இந்த பெண்ணை கேட்டு திருமுகம் அனுப்பிவிச் நாகராஜாவுடைய மனுதாரரையும் அனுப்பி விச்சார்கள்.நான் குடுக்கிறதில்லையென்று உங்கள் சூரிய வம்சத்துக்கும் எங்கள் மச்ச வம்சத்துக்கும் ஒருநாளும் சம்மந்தம்இல்லை ............
..............நாங்கள் இப்படி கொத்த மறஜாதி எங்கள் இடத்தில் தானே பாண்டியன் தானே பெண் கேட்டது என்று மாத்தரம் சொல்லி அனுப்பி விட்டார்கள்.

(கொற்றவன் தன் திருமுகத்தை கொணர்ந்த தூத குறையுடனு கோ மறவர் கொம்பை கோட்டையும் அற்றவர்சேர் திருவருங்க பெருமான் தோழன் அவதரித்த திருக்குலமென்று அறியார் போல)

........வேடுவரிடத்தில் இருக்கிற ராஜா மனுடால் திருமுகம் கொணர்ந்து குடுத்து நடந்த செய்தியை பாண்டிய ராஜாவிடத்தில் போய் கண்டு சொன்னார்கள்.

No comments:

Post a Comment