Thursday, September 6, 2018

எயினர்

சங்க இலக்கியத்தில் எயினர்

எயினர் என்ற சொல் பாலை நில பொது மக்களின் பொது பெயரை குறிக்கும் .

வேட்டுவ குடியை சேர்ந்தவர்களை குறிப்பதாக

கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் - அகம் 319/3

கடும் பரி குதிரை ஆஅய் எயினன்/நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என - அகம் 148/7,8

ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று - அகம் 181/7

வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்/அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை - அகம் 208/5,6

 ஆஅய் எயினன்/இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி - அகம் 396/4,5
வண் கை எயினன் வாகை அன்ன - புறம் 351/6

கொடு வில் எயினர் கொள்ளை உண்ட - பட் 266

கொடு வில் எயின குறும்பில் சேப்பின் - பெரும் 129

என்ற அடிகளில் அமைந்துள்ளது .

கள்வர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக

'கொடு வில் எயினர் கோட் சுரம் படர' அகம்  79/14

என்ற அடிகளில் அமைந்துள்ளது .

குறவர் குடியை சேர்ந்தவர்களையும் குறித்தது.

 புறநானூறு 157 வைத்து பாடலை பாடியவர் குறமகள் இளவெயினி. குறமகள் என்ற அடைமொழியிலிருந்து இவர் குறக்குலத்தைச் சார்ந்தவர் என்று தெரிகிறது. மலைவாழ் குறவர்கள் எயினர் என்றும் குறக்குலப் பெண்கள் எயினி என்றும் அழைக்கப்பட்டனர்.

களிறு தொடூஉ கடக்கும் கான்யாற்று அத்தம் - அகம் 137/௩

அர்த்தம் =பாலை நிலத்தில் இருந்த பாதை .கான் =முல்லை நிலம் (காடு )

No comments:

Post a Comment