சங்க இலக்கியத்தில் மழவர்
சங்க இலக்கியத்தில் மழவர் என்ற சொல் குடிபெயர் கிடையாது .
போர் வீரர்களை குறிப்பதாக
‘…………..வெம் போர்
மழவர் பெருமகன் மாவள் ஓரி’ நற் 52/8-9
வீளை அம்பின் விழு தொடை மழவர்/நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து - அகம் 131/6,7
வார் கழல் பொலிந்த வன்கண் மழவர்/பூ தொடை விழவின் தலை நாள் அன்ன - அகம் 187/7,8
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை - பதி 21/24
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை - பதி 55/8
என்ற அடிகளில் அமைந்துள்ளது .
வெட்சி வீரர்களையும் ,கரந்தை வீரர்களையும் மழவர் என்று சங்க இலக்கியத்தில் பல இடங்களில் அழைக்கபட்டனர் .
களவு தொழில் செய்ததை குறிப்பதாக
".....இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்....."(அகம்.91)
பொருள்: கரிய நிறமுடைய இரலை மான்கள் உறங்கும் பாறாங்கற்களால் ஆன உயர்ந்த கற்குவியலில் அஞ்சாமை உடைய மழவர் பசுக்களை களவு செய்வதற்கு உதவியாய் வளர்ந்து நீண்ட அடியை உடைய ஆசினிப் பலவின் மரங்களை உடைய ஊர்.
"....கண நிரை அன்ன, பல் கால் குறும்பொறை
தூது ஒய் பார்ப்பான்.........
................
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்....."(அகம்.337)
பொருள்: உப்பு வணிகர் கூட்டமாகச் செல்லும் கழுதை வரிசை
போன்று விளங்கும் பாறைகளின் வழியே பல முறையும் தூதாகப் போகும் பார்ப்பான், வெண்மையான ஓலைச் சுருட்டுடன் வரும் இயல்பைப் பார்த்து, உண்ணாமையால் வாட்டம் கொண்ட விலாவுடைய ‘இவன் கையில் இருப்பது பொன்னாகவும் இருக்கக் கூடும்’ என்று எண்ணி, கையில் படைக்கருவியை உடைய மழவர் பயன் ஏதும் இல்லாமல் கொன்று வீழ்த்தினர்.
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை -அகம் 121/11-12
என்ற அடிகளில் அமைந்துள்ளது.
சங்க இலக்கியத்தில் மழவர் என்ற சொல் குடிபெயர் கிடையாது .
போர் வீரர்களை குறிப்பதாக
‘…………..வெம் போர்
மழவர் பெருமகன் மாவள் ஓரி’ நற் 52/8-9
வீளை அம்பின் விழு தொடை மழவர்/நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து - அகம் 131/6,7
வார் கழல் பொலிந்த வன்கண் மழவர்/பூ தொடை விழவின் தலை நாள் அன்ன - அகம் 187/7,8
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை - பதி 21/24
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை - பதி 55/8
என்ற அடிகளில் அமைந்துள்ளது .
வெட்சி வீரர்களையும் ,கரந்தை வீரர்களையும் மழவர் என்று சங்க இலக்கியத்தில் பல இடங்களில் அழைக்கபட்டனர் .
களவு தொழில் செய்ததை குறிப்பதாக
".....இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்....."(அகம்.91)
பொருள்: கரிய நிறமுடைய இரலை மான்கள் உறங்கும் பாறாங்கற்களால் ஆன உயர்ந்த கற்குவியலில் அஞ்சாமை உடைய மழவர் பசுக்களை களவு செய்வதற்கு உதவியாய் வளர்ந்து நீண்ட அடியை உடைய ஆசினிப் பலவின் மரங்களை உடைய ஊர்.
"....கண நிரை அன்ன, பல் கால் குறும்பொறை
தூது ஒய் பார்ப்பான்.........
................
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்....."(அகம்.337)
பொருள்: உப்பு வணிகர் கூட்டமாகச் செல்லும் கழுதை வரிசை
போன்று விளங்கும் பாறைகளின் வழியே பல முறையும் தூதாகப் போகும் பார்ப்பான், வெண்மையான ஓலைச் சுருட்டுடன் வரும் இயல்பைப் பார்த்து, உண்ணாமையால் வாட்டம் கொண்ட விலாவுடைய ‘இவன் கையில் இருப்பது பொன்னாகவும் இருக்கக் கூடும்’ என்று எண்ணி, கையில் படைக்கருவியை உடைய மழவர் பயன் ஏதும் இல்லாமல் கொன்று வீழ்த்தினர்.
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை -அகம் 121/11-12
என்ற அடிகளில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment