Saturday, August 25, 2018

தொல்குடி வேட்டுவ வேளிர்

வேளிர்:

***********************************************

வேட்டு மாந்தர்=வேள் மாந்தர்                       வேட்டு என்ற வேர் சொல்லில் இருந்து வேள் என்ற சொல் பிறந்தது.                        வேள் என்பது ஒருமை வேளிர் என்பது பன்மை சொல்                           சங்க காலத்தில் போர் தொழில்
 செய்தவர்களை வேட்டுவர் என்று அழைக்கப்பட்டனர் .வேளிர்கள் வேட்டுவ குடியை சேர்ந்தவர்கள்.

வேட்டுவர் =வேளிர்

சங்க காலத்தில்  வில்லர் (வில் எயினர் ) என்று அழைக்கபட்ட குலகுழுக்கள் (இனக்குழு ) மண்ணையும் ,மக்களையும் பாதுகாக்க  போரை விரும்பி (போர் வேட்டு வினை ) செய்தார்கள் .இவர்களை தொல்காப்பியர் வேட்டுவர் என்று அழைத்தார் .வேட்டுவர் என்ற சொல்லில் இருந்து வேள் என்ற சொல் பிறந்தது .வேட்டுவர் என்ற சொல் போர் வினையை(போர் தொழில் ) சுட்டும் சொல் .வேட்டுவர்  போர் தொழில்  செய்தவர்கள் .வேட்டுவ குடியில் இருந்துதான் வேளிர்களும் ,வேந்தர்களும் உருவானார்கள் .

                          வேட்டு =வேள்
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை - அகம் 144/14
செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர் - அகம் 157/4
தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு/வேறு பல் பூளையொடு உழிஞை சூடி - பட் 234,235

அரும் படை தானை அமர் வேட்டு கலித்த - வஞ்சி 26/48
செரு வேட்டு புகன்று எழுந்து - வஞ்சி 29/14
வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் - கலி 23/9

                       வேட்டு =வேட்டுவர்
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட - முல் 26
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு/வயவர் மகளிர் என்றி ஆயின் - நற் 276/2,3
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ - அகம் 387/9
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு/வேய் பயில் அழுவத்து பிரிந்த நின் - அகம் 318/13,14
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர் - அகம் 208/15
வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த - அகம் 372/4

                   வேட்டம் =வேட்டை

சங்க காலத்தில்  வேட்டை தொழிலை குறிக்க வேட்டம் ,வேட்டை போன்ற சொற்கள் பயன்படுத்தபட்டது .

பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே - குறு 123/5
பெரும் கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர் - அகம் 140/1
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள் - பெரும் 111
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து - நெடு 129
பாய் இரும் பனி கடல் வேட்டம் செல்லாது - பட் 92
வேட்டம் போகிய குறவன் காட்ட - அகம் 182/6
விசைத்த வில்லர் வேட்டம் போகி - அகம் 284/9
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன் - புறம் 152/6
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என - அகம் 70/1
வேட்ட கள்வர் விசி உறு கடும் கண் - அகம் 63/17
புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என - மணி 18/168

                                                                        வேட்டவர்=விரும்பியவர்                  


வேட்டவர் பெறாது வீதி வெறு நிலம் கிடந்த அன்றே - சிந்தா:13 2972/4
நிலை இலா உலகில் நின்ற வண் புகழை வேட்டவன் நிதியமே போன்றும் - சிந்தா:10 2107/1

No comments:

Post a Comment