#தொல்குடி #வேட்டுவர் #வரலாறு:
**************************************************
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த
வேல்கெழு தானை வெருவெரு தோன்றல்
ஆனிரைகளையுடைய கொங்கரது நாட்டை
தன் நாட்டோடு அகப்படுத்திக் கொண்ட
(பதி.22/15-16)
வில் வேட்டுவ குடியைச் சேர்ந்த சேர மன்னன் ஆநிரைகளையுடைய வெங்கச்சி வேட்டுவ குடியைச் சேர்ந்த தலைவனின் (#கொங்கர்) நாட்டை வென்று மழ கொங்கு நாட்டை ஆண்ட புல்லை வேட்டுவ குடியைச் சேர்ந்த கொல்லிமழவனை வென்று சேர கொங்கு நாட்டோடு இணைக்கப்பட்டு இருக்கிறது.
முல்லை நிலத்தில் ஆயர்கள் ஆடு மாடுகளை வளர்த்தல்,மேய்த்தல்,பால் கறத்தல் போன்ற தொழில்களை செய்தனர்.அப்பகுதிகளை ஆண்ட வேட்டுவ குடியைச் சேர்ந்த மன்னனுக்குத் தான் அந்த முல்லை நிலப்பகுதிகளும் ,கால்நடைகளும் சொந்தம்.
சங்க இலக்கியத்தில் வேட்டுவர் என்று அழைக்கப்பட்டவர்கள் கல்வெட்டுகளில் வேட்டுவர் என்று அழைக்கப்பட்டனர்.
சங்க இலக்கியத்தில் காவலர்(அ) காவலன் என்று அழைக்கப்பட்ட வேட்டுவ குடியினரை கல்வெட்டுகளில் காவலன் என்று அழைக்கப்பட்டனர்.
வேட்டுவ குடியினர் வேட்டம்(வேட்டை) புரிந்ததை சங்க இலக்கியங்கள் கூறுகிறது.இதனால் இவர்களை கல்வெட்டுகளில் வேட்டைக்காரன்(அ) வேடர்(அ)வேடுவர் என்று அழைக்கப்பட்டனர்.
முல்லை நிலத்தை ஆண்ட வேட்டுவ குடியினரைப் பற்றி புறப்பொருள் வெண்பாமாலை ,வாகைப் படலத்தில் கூறப்பட்டுள்ளது.
செருமுனை உடற்றும் செஞ்சுடர் நெடுவேல்
இருநிலம் காவலன் இயல்பு உரைத்தன்று
(171.#அரச #முல்லை)
#உரை:
பெரும் பகையை வருத்தும் சிவந்த சோதியாற் பொலிந்த நெடிய வேலினையுடைய பெரிய நிலத்தை (#முல்லை) ஆளுகிற காவலன்(#வேட்டுவன்) தன்மையை கூறியது.
தவழ்திரை முழங்குந் தண்கடல் வேலிச்
கமழ்தார் மன்னவன் காவன் மிகுத்தன்று
(178.#காவன் #முல்லை)
#உரை:
ஊருந்திரை ஆரவாரிக்கும் குளிர்ந்த கடலை வேலியாக உடைய நிலத்து கமழ்தார்யுடைய மன்னன் பாதுகாத்தலை சிறப்பித்தது.
அடல்வேல் ஆடவர்க்கு அன்றியும் ,அவ் இல்
மடவரால் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று
(175.#மூதில் #முல்லை)
#உரை:
மூதில் முல்லை என்பது புறத்திணைக்குரிய ஒரு துறையாகும் .புறத்திணையில் ஒன்றான வாகைதிணையில் வரும் துறை.மூதில் என்பது மூத்தகுடி .மூத்த முல்லை குடி .அது மேம்பட்ட குடி.
வேட்டுவ குடியைச் சேர்ந்த பெண்களை (#வேட்டுவச்சி) சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்களில் "#மூதிற் #பெண்டிர்" "#மூதில் #மகளிர்" என அழைக்கப்பட்டனர் (புறம் 19/15,279/2)
மூதில் மகளிரைப் பற்றி புறநானூறு கூறுகிறது.(புறம்.326,333)
முல்லை நிலத்தில் "சிலைவில் பகழிச் செந்துவர் ஆடைக் கொலைவில் எயினர் தங்கை" (ஐங் -363) தலைவியாக கூறப்படுகிறது.
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினியர்
(#சிலம்பு #காடுகாண் #காதை ,64-66)
முல்லையும் ,குறிஞ்சியும் பாலை வடிவத்தை (படிவம்) எடுத்துள்ளன என சிலப்பதிகாரம் கூறுகிறது. மழை பெய்ததும் இப்பாலை வடிவம் முல்லை,குறிஞ்சி வடிவமாக மாறும்.
முல்லை பாலையாக மாறும் (அகம்-111).குறிஞ்சி பாலையாக மாறும் (கலித்தொகை 2 வது பாடல்) .பாலை வீரர்களின் #கொற்றவை நிலை,துடிநிலை என்பன குறிஞ்சியின் ஒரு பகுதியாக குறிப்பிடப்படுகின்றன(புறத்திணையில் -4)
திருமுருகாற்றுப்படையில் #முருகனை #கொற்றவை #சிறுவ (258),#பழையோள் #குழவி (259) என்னும் தொடர்களால் குறிப்பிடப்படுகிறது.
**************************************************
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த
வேல்கெழு தானை வெருவெரு தோன்றல்
ஆனிரைகளையுடைய கொங்கரது நாட்டை
தன் நாட்டோடு அகப்படுத்திக் கொண்ட
(பதி.22/15-16)
வில் வேட்டுவ குடியைச் சேர்ந்த சேர மன்னன் ஆநிரைகளையுடைய வெங்கச்சி வேட்டுவ குடியைச் சேர்ந்த தலைவனின் (#கொங்கர்) நாட்டை வென்று மழ கொங்கு நாட்டை ஆண்ட புல்லை வேட்டுவ குடியைச் சேர்ந்த கொல்லிமழவனை வென்று சேர கொங்கு நாட்டோடு இணைக்கப்பட்டு இருக்கிறது.
முல்லை நிலத்தில் ஆயர்கள் ஆடு மாடுகளை வளர்த்தல்,மேய்த்தல்,பால் கறத்தல் போன்ற தொழில்களை செய்தனர்.அப்பகுதிகளை ஆண்ட வேட்டுவ குடியைச் சேர்ந்த மன்னனுக்குத் தான் அந்த முல்லை நிலப்பகுதிகளும் ,கால்நடைகளும் சொந்தம்.
சங்க இலக்கியத்தில் வேட்டுவர் என்று அழைக்கப்பட்டவர்கள் கல்வெட்டுகளில் வேட்டுவர் என்று அழைக்கப்பட்டனர்.
சங்க இலக்கியத்தில் காவலர்(அ) காவலன் என்று அழைக்கப்பட்ட வேட்டுவ குடியினரை கல்வெட்டுகளில் காவலன் என்று அழைக்கப்பட்டனர்.
வேட்டுவ குடியினர் வேட்டம்(வேட்டை) புரிந்ததை சங்க இலக்கியங்கள் கூறுகிறது.இதனால் இவர்களை கல்வெட்டுகளில் வேட்டைக்காரன்(அ) வேடர்(அ)வேடுவர் என்று அழைக்கப்பட்டனர்.
முல்லை நிலத்தை ஆண்ட வேட்டுவ குடியினரைப் பற்றி புறப்பொருள் வெண்பாமாலை ,வாகைப் படலத்தில் கூறப்பட்டுள்ளது.
செருமுனை உடற்றும் செஞ்சுடர் நெடுவேல்
இருநிலம் காவலன் இயல்பு உரைத்தன்று
(171.#அரச #முல்லை)
#உரை:
பெரும் பகையை வருத்தும் சிவந்த சோதியாற் பொலிந்த நெடிய வேலினையுடைய பெரிய நிலத்தை (#முல்லை) ஆளுகிற காவலன்(#வேட்டுவன்) தன்மையை கூறியது.
தவழ்திரை முழங்குந் தண்கடல் வேலிச்
கமழ்தார் மன்னவன் காவன் மிகுத்தன்று
(178.#காவன் #முல்லை)
#உரை:
ஊருந்திரை ஆரவாரிக்கும் குளிர்ந்த கடலை வேலியாக உடைய நிலத்து கமழ்தார்யுடைய மன்னன் பாதுகாத்தலை சிறப்பித்தது.
அடல்வேல் ஆடவர்க்கு அன்றியும் ,அவ் இல்
மடவரால் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று
(175.#மூதில் #முல்லை)
#உரை:
மூதில் முல்லை என்பது புறத்திணைக்குரிய ஒரு துறையாகும் .புறத்திணையில் ஒன்றான வாகைதிணையில் வரும் துறை.மூதில் என்பது மூத்தகுடி .மூத்த முல்லை குடி .அது மேம்பட்ட குடி.
வேட்டுவ குடியைச் சேர்ந்த பெண்களை (#வேட்டுவச்சி) சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்களில் "#மூதிற் #பெண்டிர்" "#மூதில் #மகளிர்" என அழைக்கப்பட்டனர் (புறம் 19/15,279/2)
மூதில் மகளிரைப் பற்றி புறநானூறு கூறுகிறது.(புறம்.326,333)
முல்லை நிலத்தில் "சிலைவில் பகழிச் செந்துவர் ஆடைக் கொலைவில் எயினர் தங்கை" (ஐங் -363) தலைவியாக கூறப்படுகிறது.
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினியர்
(#சிலம்பு #காடுகாண் #காதை ,64-66)
முல்லையும் ,குறிஞ்சியும் பாலை வடிவத்தை (படிவம்) எடுத்துள்ளன என சிலப்பதிகாரம் கூறுகிறது. மழை பெய்ததும் இப்பாலை வடிவம் முல்லை,குறிஞ்சி வடிவமாக மாறும்.
முல்லை பாலையாக மாறும் (அகம்-111).குறிஞ்சி பாலையாக மாறும் (கலித்தொகை 2 வது பாடல்) .பாலை வீரர்களின் #கொற்றவை நிலை,துடிநிலை என்பன குறிஞ்சியின் ஒரு பகுதியாக குறிப்பிடப்படுகின்றன(புறத்திணையில் -4)
திருமுருகாற்றுப்படையில் #முருகனை #கொற்றவை #சிறுவ (258),#பழையோள் #குழவி (259) என்னும் தொடர்களால் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment