Saturday, September 1, 2018

செங்கம் நடுகற்கள்(1971/74)

#கல்வெட்டு #காலம் #கி.#பி.700 -#கி.#பி.800

#இடம்: செங்கம் தாழையூத்து வேடியப்பன் கோயிலுள்ள நடுகல்(செங்கம் நடுகற்கள் 1971/74)

#காலம்: இரண்டாம் நந்திவர்மனின் 2வது ஆட்சியாண்டு ;கி.பி.734.

#செய்தி: வேணாட்டில் வெண்மறுக்கோட்டு என்ற ஊரை சேர்ந்த வேட்டுவர் தாழையூரில் ஆநிரை கவர்ந்ததைப் பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.

#கல்வெட்டு:

கோவிசைய நந்திபன்றரையர்க்கு யாண்டு இரண்டாவது ஊணமிறையார் வேணாடிள வெண்மறுக்கோட்டு வேட்டுவர் தாழையூர் தொறுக் கொண்ட நான்று தாழை ஊருடைய வண்ணக்க கடையனார் தொறு மீட்டு பட்டார்.

#குறிப்பு:இங்கு வேட்டுவர் என்ற சொல் வேட்டுவகுடியை சுட்டும்.வெண்மறுக்கோட்டு ஊரைச் சேர்ந்த வேட்டுவர் பாண மன்னனின் பங்காளிகள் ஆவார்கள்.

No comments:

Post a Comment