சங்க இலக்கியத்தில் மறவர்
சங்ககாலத்தில் மறவர் ,மறம் சொற்கள் வீரம் ,கொலை தொழில் புரிபவர் ,படை வீரர் போன்ற அர்த்தத்தில் பயன்படுத்த பட்டுள்ளது .சங்ககாலத்தில் மறவர் என்ற சொல் இனத்தை குறிக்க வில்லை .
வீரத்தை குறிப்பதாக
மறம் பாடிய பாடினியும்மே - புறம் 11/11
என்ற அடிகளில் அமைந்துள்ளது .
போர் வீரர்களை குறிப்பதாக
தினை கள் உண்ட தெறி கோல் மறவர்/விசைத்த வில்லர் வேட்டம் போகி - அகம் 284/8,9
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர்/நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது - அகம் 387/14,15
நல் அமர் கடந்த நாண் உடை மறவர்/பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் - அகம் 67/8,9
வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர்/வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்மார் - அகம் 35/6,7
விழுதொடை மறவர் வில்இட தொலைந்தோர்
எழுத்து உடை நடுகல் அன்ன விழு பிணர்- ஐங் 352/1-2
தேர்வண் கிள்ளி தம்பி வார்கோல்
கொடுமர மறவர் பெரும (புறம் 43)
என்ற அடிகளில் அமைந்துள்ளது .
படைத்தலைவர்களை குறிப்பதாக
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்/குழியில் கொண்ட மராஅ யானை - அகம் 13/6,7
வானவன் மறவன் வணங்கு வில் தட கை - அகம் 77/15
இழை அணி யானை சோழர் மறவன்/கழை அளந்து அறியா காவிரி படப்பை - அகம் 326/9,10
பெருந்தகை மறவன் போல கொடும் கழி - நற் 287/4
மீளி மறவனும் போன்ம் - கலி 104/50
என்ற அடிகளிலிலும் அமைந்துள்ளது .
சங்க இலக்கியத்தில் வெச்சி வீரர்களையும் ,கரந்தை வீரர்களையும் மறவர் என்று பல இடங்களில் கூறப்பட்டு உள்ளது .
ஆறலை கள்வர்களை குறிப்பதாக
அத்தம் நண்ணி அதர்பார்த் திருந்த
கொலைவெம் கொள்கை கொடும்தொழில் மறவர்
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
எஃகுறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய- அகம் 363/9-12
என்ற அடிகளிலும்
அத்தம் நண்ணி அதர்பார்த்திருந்த - காட்டினை அடைந்து அங்க வழிவருவாரைப் பார்த்துக்கொண்டிருந்த, கொலைவெம் கொள்கை கொடுதொழல் மறவர் - கொலையை விரும்பும் கோட்பாட்னையும் கொடிய தொழலையுமுடைய மறவர், ஆறு செல் மாக்கள் அருநிறத்து எறிந்த-வழிச்செல்லும் மக்களது அரிய மார்பிலே எறிந்த, எஃகு உற விழு புண் கூர்ந்தோர் எய்திய-வேலாலுற்ற சிறந்தபுண்ணை மிகக் கொண்டு பட்டோரை அடைந்த.
அத்தம் என்ற சொல் பாலை நிலத்தில் இருந்த பாதையை குறிக்கும் (ஐங் 351 /1 -3 )
‘ …………………… என்றும்
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த
படு முடை பருந்து பார்த்து இருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே ‘குறு 283/4-8
என்ற அடிகளிலும்
எக்காலத்திலும் கூற்றுவனைப் போன்ற கொலைத்தொழிலையுடைய வேலைக் கொண்ட மறவர் வழியில் இருந்து தங்கி வழிச்செல்வோரைக் கொன்றதனால் உண்டான அழுகியபுலாலைப் பருந்துகள் எதிர்நோக்கி இருக்கும் நீண்ட பழைய இடங்களிலுள்ள நீர் இல்லாத வழியில்
‘நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று
கொடும் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானை கானம் நீந்தி’ குறு 331/1-4
என்ற அடிகளிலும்
நெடிய மூங்கில் வாடி உலர்ந்துபோன நீரற்ற அரிய பாலைவெளியில்
வழிச்செல்லும் பயணிகள் அழியுமாறு அவரை எதிர்த்து நின்று
வளைந்த வில்லையுடைய மறவர்கள் காட்டில் கொள்ளைப்பொருளைப் பகிர்ந்துகொள்ளும்
கடுமையான யானைகள் இருக்கும் பாலைநிலத்தைக் கடந்து
‘நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில்
துவர் செய் ஆடை செம் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்’ நற் 33/5-8
என்ற அடிகளிலும்
நிறைந்த மழையை அறியாத, குறைந்த உணவையுடைய இரவினில்
பழுப்பேறிய ஆடையையுடைய, செம்மையாக அம்பினைத் தொடுத்திருக்கும் மறவர்கள் வழியைப் பார்த்து அமர்ந்திருக்கும் அஞ்சத்தக்க பாதையினில் செல்ல எண்ணுகிறார் அவர் என்றால் அதை மறுப்பதற்கு
‘விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர்’குறுந்தொகை-274/3,4
என்ற அடிகளிலும் அமைந்துள்ளது .
விடுவதற்கான அம்பினை வில்லோடும் கையினில் பற்றி, அந்த மரத்தின் கிளைகளில் ஏறி வழியில் வருவோரைப் பார்க்கும் கொடுமைமிக்க ஆடவர்(மறவர் ).
சங்ககாலத்தில் மறவர் ,மறம் சொற்கள் வீரம் ,கொலை தொழில் புரிபவர் ,படை வீரர் போன்ற அர்த்தத்தில் பயன்படுத்த பட்டுள்ளது .சங்ககாலத்தில் மறவர் என்ற சொல் இனத்தை குறிக்க வில்லை .
வீரத்தை குறிப்பதாக
மறம் பாடிய பாடினியும்மே - புறம் 11/11
என்ற அடிகளில் அமைந்துள்ளது .
போர் வீரர்களை குறிப்பதாக
தினை கள் உண்ட தெறி கோல் மறவர்/விசைத்த வில்லர் வேட்டம் போகி - அகம் 284/8,9
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர்/நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது - அகம் 387/14,15
நல் அமர் கடந்த நாண் உடை மறவர்/பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் - அகம் 67/8,9
வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர்/வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்மார் - அகம் 35/6,7
விழுதொடை மறவர் வில்இட தொலைந்தோர்
எழுத்து உடை நடுகல் அன்ன விழு பிணர்- ஐங் 352/1-2
தேர்வண் கிள்ளி தம்பி வார்கோல்
கொடுமர மறவர் பெரும (புறம் 43)
என்ற அடிகளில் அமைந்துள்ளது .
படைத்தலைவர்களை குறிப்பதாக
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்/குழியில் கொண்ட மராஅ யானை - அகம் 13/6,7
வானவன் மறவன் வணங்கு வில் தட கை - அகம் 77/15
இழை அணி யானை சோழர் மறவன்/கழை அளந்து அறியா காவிரி படப்பை - அகம் 326/9,10
பெருந்தகை மறவன் போல கொடும் கழி - நற் 287/4
மீளி மறவனும் போன்ம் - கலி 104/50
என்ற அடிகளிலிலும் அமைந்துள்ளது .
சங்க இலக்கியத்தில் வெச்சி வீரர்களையும் ,கரந்தை வீரர்களையும் மறவர் என்று பல இடங்களில் கூறப்பட்டு உள்ளது .
ஆறலை கள்வர்களை குறிப்பதாக
அத்தம் நண்ணி அதர்பார்த் திருந்த
கொலைவெம் கொள்கை கொடும்தொழில் மறவர்
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
எஃகுறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய- அகம் 363/9-12
என்ற அடிகளிலும்
அத்தம் நண்ணி அதர்பார்த்திருந்த - காட்டினை அடைந்து அங்க வழிவருவாரைப் பார்த்துக்கொண்டிருந்த, கொலைவெம் கொள்கை கொடுதொழல் மறவர் - கொலையை விரும்பும் கோட்பாட்னையும் கொடிய தொழலையுமுடைய மறவர், ஆறு செல் மாக்கள் அருநிறத்து எறிந்த-வழிச்செல்லும் மக்களது அரிய மார்பிலே எறிந்த, எஃகு உற விழு புண் கூர்ந்தோர் எய்திய-வேலாலுற்ற சிறந்தபுண்ணை மிகக் கொண்டு பட்டோரை அடைந்த.
அத்தம் என்ற சொல் பாலை நிலத்தில் இருந்த பாதையை குறிக்கும் (ஐங் 351 /1 -3 )
‘ …………………… என்றும்
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த
படு முடை பருந்து பார்த்து இருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே ‘குறு 283/4-8
என்ற அடிகளிலும்
எக்காலத்திலும் கூற்றுவனைப் போன்ற கொலைத்தொழிலையுடைய வேலைக் கொண்ட மறவர் வழியில் இருந்து தங்கி வழிச்செல்வோரைக் கொன்றதனால் உண்டான அழுகியபுலாலைப் பருந்துகள் எதிர்நோக்கி இருக்கும் நீண்ட பழைய இடங்களிலுள்ள நீர் இல்லாத வழியில்
‘நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று
கொடும் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானை கானம் நீந்தி’ குறு 331/1-4
என்ற அடிகளிலும்
நெடிய மூங்கில் வாடி உலர்ந்துபோன நீரற்ற அரிய பாலைவெளியில்
வழிச்செல்லும் பயணிகள் அழியுமாறு அவரை எதிர்த்து நின்று
வளைந்த வில்லையுடைய மறவர்கள் காட்டில் கொள்ளைப்பொருளைப் பகிர்ந்துகொள்ளும்
கடுமையான யானைகள் இருக்கும் பாலைநிலத்தைக் கடந்து
‘நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில்
துவர் செய் ஆடை செம் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்’ நற் 33/5-8
என்ற அடிகளிலும்
நிறைந்த மழையை அறியாத, குறைந்த உணவையுடைய இரவினில்
பழுப்பேறிய ஆடையையுடைய, செம்மையாக அம்பினைத் தொடுத்திருக்கும் மறவர்கள் வழியைப் பார்த்து அமர்ந்திருக்கும் அஞ்சத்தக்க பாதையினில் செல்ல எண்ணுகிறார் அவர் என்றால் அதை மறுப்பதற்கு
‘விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர்’குறுந்தொகை-274/3,4
என்ற அடிகளிலும் அமைந்துள்ளது .
விடுவதற்கான அம்பினை வில்லோடும் கையினில் பற்றி, அந்த மரத்தின் கிளைகளில் ஏறி வழியில் வருவோரைப் பார்க்கும் கொடுமைமிக்க ஆடவர்(மறவர் ).
No comments:
Post a Comment