Saturday, September 1, 2018

தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் (1973/17)

கல்வெட்டு காலம் கி.பி.600-கி.பி.700:

இடம்: தருமபுரி மாவட்டம் அரூர்,சின்னாங்குப்பம் வேடியப்பன் கோயிலுள்ள நடுகல்.(தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் 1973/17)

காலம்: கங்கர் ஆட்சி ,(கி.பி.600-கி.பி.700)

செய்தி: வீரசேனாதிபதியார் (கங்கனின் படைதளபதி) என்பவர் வேட்டுவ குடியைச் சேர்ந்த இளவரையர் என்பவனின் படையோடு போரிட்டு இறந்த செய்தி.

கல்வெட்டு:

1. .........................................

2. ............... விசையன் கங்க

3. ற்................ன்றரு மக்கள்

4. வீரச் சேனாதியாரு

5. பருவான வேட்டுவ இளவரை

6. சேனை எறிந்து பட்டார்

7. கல்

குறிப்பு:

வேட்டுவ குடியைச் சேர்ந்த இளவரையன் என்பவர் பாண மன்னனின் பங்காளி ஆவார்.இங்கு வேட்டுவ என்ற சொல் வேட்டுவ குடியைச் சுட்டும்.

No comments:

Post a Comment