Wednesday, September 19, 2018

அகம்படி பிள்ளைகள்

#அகம்படி #பிள்ளைகள்:

(வேட்டுவரின் கோட்டை கொத்தளத்தில் அகம்படி செய்பவர்கள்)

-------------☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆--------------

பிள்ளை வாணகோவறையர்

வாணகோவறையர்,வாணதிராயர் என்பன ஒருபொருட் பெயர்களாகும்.
மாவலி வேட்டுவ மன்னனின் பட்டத்தரசி அல்லாத மற்ற மனைவியரிடத்து பிறந்தவர்களை 'பிள்ளை வாணகோவறையர்','பிள்ளை மாவலி வாணதிராயர்' என்ற அடைமொழி கொடுத்து அழைக்கபட்டது .இவர்கள் மாவலி வேட்டுவ மன்னனுக்கும் மற்ற குறுநில தலைவர்களுக்குக் இடையேய் நடந்த மணவினையால் பிறத்தவர்களாக இருக்க வேண்டும் .இவர்கள் நாட்டில் அமைதியை ஏற்படுத்த ஆங்காங்கே இருந்த சிற்றூர்களுக்கும் ,பேரூர்களுக்கும் தலைவர்களாக(பெரியான் உய்யவந்தானான விக்கிரமசிங்க தேவன்,பின்முடி தாங்கினார்,காரையூர் வேளார்,பிறவிக்கு நல்லறன அரசுவழிகண்ட தேவர்,ஏகவாசகன் குலோத்துங்கன் ) பணியாற்றினார்கள் .
மதுரை ,திருமங்கலம் ஆனையூர் கல்வெட்டு (கிபி 13) ஒன்று 'பிள்ளை மாவலிவாணதிராயர் அகம்படி முதலிகளில் பெரியான் உய்யவந்தானான விக்கிரமசிங்க தேவன் ' என்பவரை பற்றி கூறுகிறது .(அகம்படியார் என்றால் அரசகுலதினருக்கு அகம்படி செய்பவர்(சேவை செய்பவர் அதிலிருந்து வந்த சொல்லே "சேர்வை") , அகம்படியார்களுக்கு மேலும் கோட்டையை பாதுகாக்கும் பணிகளும் இருந்தன.)

கோனாடு கல்வெட்டு(கிபி 1470;PSI-715) ஒன்று 'தென்கோனாடு ஒல்லையூர் கூற்றத்து காரையூர் கிழாண்டறானான காரையூர் வேளார் னேன் பிள்ளை மாவலி வாணதிராயர் பிள்ளைகளில் ராசகெம்பிர வளநாட்டு வயலூர் காங்கையர் பிறவிக்கு நல்லறன அரசுவழிகண்ட தேவர் ' என்பவர்களை பற்றி கூறுகிறது .

கோனாடு கல்வெட்டு(கிபி 1470;PSI-815) ஒன்று 'பின்முடி தாங்கினார் ' என்பவரை பற்றி கூறுகிறது .

கோனாடு கல்வெட்டு(கிபி 13;1907:430) ஒன்று 'பிள்ளை குலசேகர மாவலிவாணதிராயர்'என்பவரை பற்றி கூறுகிறது .

பெரம்பலூர் ,கோயில்பாளையம் கல்வெட்டு (கிபி 1180:1992-93:443) ஒன்று 'துண்ட நாடுடையான் ஏகவாசகன் குலோத்து ங்கநானா பிள்ளை வாணகோவறையர்'என்பவரை பற்றி கூறுகிறது.

No comments:

Post a Comment